இந்தியாவில் தற்போது 14வது ஐபிஎல் மெகா தொடர் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்வின்
இந்தியாவில் கொரோனா நோய் பரவலுக்கு மத்தியில் மிக சிறப்பாக 14வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான அனைத்து வகையான பாதுகாப்பான நடவடிக்கைகளை பின்பற்றி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்தே மிக சிறப்பாக விளையாடி வருகிறது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த அணியில் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், அமித் மிஸ்ரா போன்ற மூத்த வீரர்கள் உள்ளனர். இதுவே இந்த அணிக்கு பெரும் துணையாக இருந்து வருகிறது. இதுவரை இந்த அணி விளையாடிய 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று அசத்தி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பலர் பாதித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு – என்னென்ன இயங்கும்?? இயங்காது?? முழுவிபரம்!!
I would be taking a break from this years IPL from tomorrow. My family and extended family are putting up a fight against #COVID19 and I want to support them during these tough times. I expect to return to play if things go in the right direction. Thank you @DelhiCapitals ??
— Stay home stay safe! Take your vaccine?? (@ashwinravi99) April 25, 2021
இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் இருந்து தான் விலகப்போவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது தனது குடும்பத்தினர் கொரோனாவிற்கு எதிராக போராடி வருவதாகவும் இந்நேரத்தில் நான் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று கூறி இந்த தொடரில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இவரது விலகல் டெல்லி அணிக்கு கடும் நெருக்கடியை தற்போது ஏற்படுத்தியுள்ளது.