ஐபிஎல் விதிமுறையை மீறிய ‘கிங்’ கோஹ்லி – ரூ.12 லட்சம் அபராதம்!!

0
rcb

நேற்று (ஏப்ரல் 25) நடத்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் சென்னை அணிகள் பல பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஐபிஎல் விதிமுறையை மீறியுள்ளார்.

விராட் கோஹ்லி

இந்தியாவில் தற்போது 14வது ஐபிஎல் தொடர் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா நோய்பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் ரசிகர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பல புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் அணியின் கேப்டன்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

rcb
rcb

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 25) மதியம் 3.30 மணிக்கு நடத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை அணி மிக சிறப்பாக விளையாடி 191 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஜடேஜா ஒரு ஓவரில் 37 ரன்களை குவித்து அதிரடி காட்டினார். பின்பு களமிறங்கிய பெங்களூர் அணி 122 ரன்னுக்கு சுருண்டது. பெங்களூர் அணி இந்த தொடரில் சந்தித்த முதல் தோல்வி இதுவே.

‘தல’ அஜித்தின் வலிமை பட அப்டேட் – எதிர்பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள்!!

rcb
rcb

இந்நிலையில் நேற்றைய போட்டியிள் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோஹ்லி ஐபிஎல் விதிமுறையை மீறியுள்ளார். அதன்படி நேற்று பந்துவீச்சில் பெங்களூர் அணி அதிக அளவிலான நேரத்தை எடுத்துள்ளது. இதன் காரணமாக தற்போது கேப்டன் விராட் கோஹ்லிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தோனி, ரோஹித், மோர்கன் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here