இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் – ஒரே நாளில் 3,52,991 பேருக்கு தொற்று உறுதி!!

0

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 3,52,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக அதிகமான அளவில் மக்களை பாதித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் தடுப்பூசி வழங்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை கண்டிராத வகையில் கொரோனா நோய்த்தொற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3,52,991 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73.13,163 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் நாட்டில் கொரோனா தொற்றினால் 2,812 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனை தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,95,213 ஆக அதிகரித்துள்ளது.

ஐபிஎல் விதிமுறையை மீறிய ‘கிங்’ கோஹ்லி – ரூ.12 லட்சம் அபராதம்!!

அதேபோல் நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 2,19,272 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,43,04,382 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் 28,13,658 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1,30,907 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here