நாட்டில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. இதனால் நாட்டில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மகன் கொரோனா தொற்றினால் தற்போது உயிரிழந்துள்ளார்.
கொரோனா பரவல்:
நாட்டில் தற்போது கொரோனா நோய்பரவளின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் தடுப்பூசி பணிகளும் நாட்டில் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கையை போல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் சமீப காலமாக அரசியல் பிரமுகர்களிடையே கொரோனா பாதிப்பு மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். தற்போது இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – பீதியில் மக்கள்!!
It is with great sadness that I have to inform that I lost my elder son, Ashish Yechury to COVID-19 this morning. I want to thank all those who gave us hope and who treated him – doctors, nurses, frontline health workers, sanitation workers and innumerable others who stood by us.
— Sitaram Yechury (@SitaramYechury) April 22, 2021
அதன்படி அவர் கூறியதாவது, எனது மூத்த மகன் சீதாராம் யெச்சூரி (வயது 34) நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குருகிராமில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தார். மேலும் தனது மூத்த மகன் உயிரிழந்துள்ளது வேதனையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.