இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – பீதியில் மக்கள்!!

0

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோன நோய்த்தொற்று பாதிப்பின் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து நாள் ஒன்றுக்கு இந்தியாவில் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போது அந்த வகையில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு சுமார் 3 லட்சத்தை கடந்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3,14,835 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,30,965 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 2,104 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,657 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 1,78,841 பேர் குணமடைந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதனால் நாட்டில் தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,34,54,880 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாட்டில் மருத்துவமனையில் 22,91,428 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் அனைத்து தடுப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டும், தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here