‘நீங்க வீட்டுக்கு வரதுக்குள்ள வெண்பா கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டு வருவேன்’ – சௌந்தர்யாவிடம் சவால் விடும் பாரதி!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி வந்து வெண்பாவை தான் திருமணம் செய்துகொண்டேன் என்று கூறியதும் கண்ணம்மா உடைந்து போகிறார். மேலும் இத்தனை நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து பார்க்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி சௌந்தர்யாவை கண்டபடி திட்டுகிறார். இனிமேல் கண்ணம்மாவை பார்க்க வந்தீங்கனா அவ்வோளோ தான். என் வாழ்க்கையே கேள்விக்குறி ஆக்குனவ. இவள் மேல எவளோ பாசம் வச்சு இருந்தேன் தெரியுமா?? ஆனால் எனக்கு துரோகம் பண்ணிட்டு இருக்கா இவளை எப்படி நான் எதுக்குவேன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெண்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேனு சொன்னதெல்லாம் பொய் தான் என்று கூறுகிறார் பாரதி. இதனை சௌந்தர்யாவும் அகிலனும் இப்போவே கண்ணம்மாகிட்ட சொல்லியே ஆகணும் என்று கண்ணம்மா வீட்டிற்கு செல்ல முயல்கின்றனர். அப்பொழுது பாரதி அவர்களை தடுக்கிறார். அதையும் மீறி நீங்க கண்ணம்மா கிட்ட சொன்னிங்கன்னா நீங்க வீட்டுக்கு வரதுக்குள்ள வெண்பா கழுத்துல தாலி கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவேன் என்று சொன்னதும் சௌந்தர்யா அகிலன் ஷாக்காகின்றனர்.

இதை கண்டிப்பா நடத்தி காட்டுவேன் என்று கூறுகிறார். இதனால் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறார் சௌந்தர்யா. அடுத்ததாக கண்ணம்மா வீட்டில் பாரதியுடன் வாழ்ந்த நினைவுகள் அனைத்தையும் நினைத்து கண்ணீர் வடிக்கிறார். ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை கண்ணம்மா அனைத்தையும் நினைத்து பார்க்கிறார்.

விராட் கோஹ்லி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல் – குவியும் பாராட்டுக்கள்!!

அப்பொழுது தான் தெரிகிறது, பாரதியும் கண்ணம்மாவும் எவ்வளவு அழகாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது. அதன் பிறகு கண்ணம்மா புலம்ப ஆரம்பிக்கிறார். வெண்பாவை எப்படி இவர்கள் மருமகளாக ஏற்றுக்கொண்டார்கள். அத்தைக்கும் மாமாக்கும் இதெல்லாம் நியாயமா இருக்க?? நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கென்ன?? பண்ணலைனா எனக்கென்ன?? என்று சொல்கிறார்.

நீ ஒரு குப்பை மாதிரி தான் என்று பாரதியை கண்டபடி பேசுகிறார். கண்ணம்மா அழுதுகொண்டிருக்கும் போது லட்சுமி வருகிறார். அப்பாவை நினைத்து தான் அம்மா அழுகிறார் என்று நினைத்து இனிமேல் நான் அப்பாவை பத்தி கேக்க மாட்டேன் என்று கூறுகிறார். அடுத்ததாக வெண்பாவை காட்டுகின்றனர்.

வெண்பா அந்த ரிப்போர்ட்டை வைத்து பேசிக்கொண்டுள்ளனர். அந்த ரிப்போர்ட்டை இதுவரையிலும் யாருமே படிக்கவில்லை என்று கூறுகிறார். அப்பொழுது பார்த்து பாரதி கால் செய்து வெண்பாவிடம் நடந்தவற்றை கூறுகிறார். வெண்பா கழுத்தில் தாலி கட்டி கூட்டிட்டு வந்துடுவேன் என்று மிரட்டியதையும் சொல்கிறார்.

இதனால் சந்தோஷமடைகிறார். இதனை வெளியில் இருந்து துர்கா கேட்டு விடுகிறார். மேலும் கண்ணம்மாவிடம் இருந்து பாரதியை இன்னும் பிரிக்க வேண்டும் என்று கூறுகிறார். வெளியில் வரும் வெண்பாவை துர்கா கடத்தி விடுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here