தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு தற்போது புதிய கட்டுப்பட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய் தொற்று மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கடந்த ஆண்டு வீசிய கொரோனாவின் முதல் அலையை விட தற்போது வீசும் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் தற்போது தமிழகத்தில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது?? அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்!!
மேலும் தமிழகத்தில் நாளை(ஏப்ரல் 20)முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. மேலும் ஊரடங்கின் பொழுது அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்துள்ளது தமிழக அரசு. அந்த வகையில் தற்போது தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கட்டுப்பாடு:
- மதுக்கடைகளுக்கு உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்க அனுமதி இல்லை.
- டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுக்களை விற்பனை செய்யக்கூடாது.
- மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும்.
- கட்டாயமாக வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி தனி மனித இடைவெளி இருக்க வேண்டும்.
- டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசல் இருக்க கூடாது.