தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது?? அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்!!

0

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக மே மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு நேற்று(ஏப்ரல் 18) அறிவித்தது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு:

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் கொரோனா தொற்றினை குறைப்பதற்காக பல்வேறு கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டது. இருந்தும் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருவதால் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இரவு நேரம் மற்றும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த 16ம் தேதி முதல் செய்முறை தேர்வு தொடங்கியது. தற்போது பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் செய்முறை தேர்வுகள் திட்டமிட்ட படி நடைபெறும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கின் போது பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத்துறை அதிரடி!!

மேலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை தேர்வு நடைபெறுவதற்கு 15 நாட்கள் முன்பே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here