இன்று “ராஜா ராணி 2” சீரியலில் சரவணனின் அப்பா மற்றும் அம்மா இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இருக்கின்றனர். அதே போல் ஆதி தான் தனியாக ஒரு கோர்ஸ் படிக்க இருப்பதாக கூறுகிறார். இதற்கு சந்தியா தனது ஆதரவினை தெரிவிக்கிறார்.
“ராஜா ராணி 2” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று ஆதி சிவகாமியிடம் வந்து தான் ஒரு ஸ்பெஷல் கோர்ஸ் படிக்க இருப்பதாகவும் அதற்கு பணம் வேண்டும் என்றும் கேட்கிறார். மாதத்திற்கு 8 ஆயிரம் ரூபாய் தான் என்றும் கூறுகிறார்.
இதனால் சிவகாமி மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பாரிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று தெரியுமா என்று கேட்கிறார்.
கதிரை படிக்க விடாமல் தொடர்ந்து தொந்தரவளிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – கடுப்பாகும் முல்லை!!
இதனால் ஆதிக்கு என்னவோ போல் ஆகி விடுகிறது. இதனை மறைந்து நின்று கேட்கும் சந்தியா ஆதிக்கு பணம் கொடுத்து உதவுகிறார். முதலில், அதனை வாங்க மறுக்கும் ஆதி, சந்தியாவின் வற்புறுத்தலால் வாங்கி விடுகிறார். இதனை சரவணன் தூரத்தில் இருந்து பார்த்து விடுகிறார். அதனால் சந்தியாவின் மேல் கோபமாகவும் இருக்கிறார். பின், சந்தியா சரவணனுக்கு சாப்பாடு செய்து கொண்டு வருகிறார்.
ஆனால், சரவணன் கோபமாக இருப்பதால் சந்தியாவை திட்டி விட்டு சென்று விடுகிறார். இதனால் சந்தியா மிகவும் சோகம் அடைந்து விடுகிறார். இப்படியாக இருக்க, இரவில் சரவணன் சந்தியா ஆதிக்கு பணம் கொடுத்ததை சொல்லி மிகவும் திட்டி விடுகிறார்.
இதனால் சந்தியா மிகவும் நொந்து போய் விடுகிறார். பின், காலையில் சரவணனை சமாளிக்க எதாவது ஐடியா இருக்கிறதா என்று யோசிக்கிறார். அப்போது ஒரு முறை சரவணன் சட்டை போடும் போது சந்தியா உதவி செய்தது அவரது ஞாபகத்திற்கு வருகிறது. இதனை அடுத்து சரவணனின் சட்டையை எடுத்து தைத்து விடுகிறார். சரவணன் குளித்து முடித்து விட்டு வந்து சட்டையை மாட்டும் போது சட்டை அவரது தலையில் மாட்டி கொள்கிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் சந்தியா உதவி செய்ய போகிறார். அப்போது தன்னை மன்னித்தால் உதவி செய்வேன் என்று கூறுகிறார். இதனால் கோபம் அடைத்து விடும் சரவணன் தானே சட்டையை மாட்டி கொண்டு சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.