90களின் ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்தவர் தான், நடிகை சினேகா. தற்போது தனது குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்னேகா
தமிழ் சினிமாவில் குடும்பபாங்காக இருக்கும் நடிகைகளுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கும். அந்த வகையில் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகை என்றால், நடிகை சினேகா தான். இவர் முதன் முதலாக தமிழில் “என்னவளே” என்ற திரைப்படத்தில் தான் நடித்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தனது முதல் திரைப்படத்தில் அவ்வளவாக இவர் கவனிக்கப்படவில்லை என்றாலும், இவர் அடுத்ததாக மம்முட்டி, தேவயானி உள்ளிட்டோர் நடித்த “ஆனந்தம்” திரைப்படத்தில் நடிகர் அப்பாஸிற்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தின் மூலமாக தான் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. இப்படியாக இருக்க, இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களிலும் இவர் தனது கவனத்தினை செலுத்தினார்.
இந்த வருசமும் போச்சா??ஆபத்தில் சிஎஸ்கே அணி! மீட்பாரா தல தோனி!!
நடிகர் பிரசாந்துடன் நடித்த “பார்த்திபன் கனவு” திரைப்படத்தில் இவர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்காக இவர் பல விருதுகளை வென்றுள்ளார். இப்படியாக இருக்க, இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பிறகும் இவர் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். இப்படியாக இருக்க, இவர் தற்போது தனது குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.