நேற்று சன்ரைசஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியதில் ஐதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை. தற்போது இதனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஐதராபாத் vs கொல்கத்தா:
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்தினர். அதில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மேலும் ஐதராபாத் அணியின் செயல்பாடு பெரிய அளவில் இல்லை என்று தான் சொல்லவேண்டும். காரணம் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் 3, சஹா 7 சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஐதராபாத் அணி தரப்பில் மனிஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்டோ அரைசதம் கடந்து சற்று ஆறுதல் அளித்தனர், ஆனால் நேற்றைய போட்டியில் அதிரடி ஆட்டக்காரரான கேன் வில்லியம்சன் அணியில் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள். மேலும் நேற்று அவர் இருந்திருந்தால் கட்டாயமாக ஐதராபாத் வெற்றி பெற்றிருக்கும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். வில்லியம்சன் கடந்த 2018ம் ஆண்டு ஐதராபாத் அணியின் கேப்டனாக திகழ்ந்தார்.
அந்த தொடரில் இவர் விளையாடிய 17 போட்டியில் 735 ரன்களை குவித்து அசத்தினார். பின்பு 2019ம் ஆண்டில் இவர் வெறும் 9 போட்டிகளில் மட்டும் விளையாடி 156 ரன்களை பதிவு செய்தார். அதேபோல் கடந்த ஆண்டும் தான் விளையாடிய 12 போட்டிகளில் 317 ரன்களை பதிவு செய்திருந்தார். தற்போது அணியில் வார்னர், ரஷீத் கான், பேர்ஸ்டோ மற்றும் முகமத் நபி ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
இந்த வருசமும் போச்சா??ஆபத்தில் சிஎஸ்கே அணி! மீட்பாரா தல தோனி!!
ஒரு அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் என்பது விதிமுறை. எனவே இவர்களில் முகமத் நபிக்கு பதில் வில்லியம்சனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர். தற்போது ஐதராபாத் அணி அடுத்ததாக பெங்களூரு அணியுடன் வருகிற 14ம் தேதி மோதுகிறது. இந்த போட்டியில் கட்டாயமாக வில்லியம்சனை அணி நிர்வாகம் தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.