ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பொதுவான பிரச்சனை என்று கூறினால் அது, முடி உதிர்தல் பிரச்சனை தான். அதில் இருந்து இயற்கை முறைகளை பயன்படுத்தி விடுபடலாம். அது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!
முடி உதிர்தல்
அனைவருக்கும் பொதுவான பிரச்சனை என்று கூறினால் அது முடி உதிர்தல் பிரச்சனை தான். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருவரின் பரம்பரை வாகு, இன்றைய சூழலில் ஏற்படும் மனஉளைச்சல், ரசாயனம் அதிகமாக உள்ள ஷாம்புக்களை பயன்படுத்துவது போன்று பல காரணங்கள் உள்ளன.
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல் – ஷாக்கான ரசிகர்கள்!!
இதனை தீர்ப்பதற்காக அதிகளவில் பணம் செலவழிக்க வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
- விளக்கெண்ணெய் – 3 டீஸ்பூன்
- வைட்டமின் இ மாத்திரை – 3
(குறிப்பு : மேற்குறிய பொருட்களை உங்கள் முடி அளவினை பொறுத்து எடுத்து கொள்ளலாம்)
ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் எடுத்து கொள்ளுங்கள். பின், அதனை நன்றாக கலக்கி விட்டு அதனை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தடவி கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை கூடிய விரைவில் சரி ஆகி விடும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் முடியின் அடர்த்தியினை அதிகரிக்க உதவும். அதே போல் உடலில் உள்ள வெப்பத்தினை குறைக்கவும் மிகவும் உதவும். இதனால் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி வளர்ந்து விடும்.