ஹார்ட் அட்டாக்கில் சரியும் சிவாவின் அப்பா – அதிர்ச்சியில் குடும்பத்தினர்! சூடுபிடிக்கும் “இதயத்தை திருடாதே”!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று கோதண்டம் பத்திரிகையினை மாற்றி கொடுத்து விடுகிறார். அதே போல் இன்று சிவாவின் அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்து விடுகிறது.

இதயத்தை திருடாதே சீரியல்

இன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் கோவிலில் வைத்து பூஜை செய்த பத்திரிகை குறித்து சிவா கேட்கிறார். அதனை சொல்லாமல் மழுப்பும் கோதண்டம் வேறு ஒரு பத்திரிகையை எடுத்து தந்து விடுகிறார். பின், ஐஸ்வர்யா சிவாவிடம் ஒரு கயிறை தந்து அதனை தனது கையில் கட்டி விட சொல்கிறார்.

முடி உதிர்தல் பிரச்சனையா?? இத ட்ரை பண்ணி பாருங்க போதும்!!

சிவா கயிறு கட்டுவதை பார்க்கும் சிவா அப்பாவிற்கு பூசாரி சொன்ன விஷயங்கள் நினைவிருக்கு வருகிறது. இதனால் அவருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் பதட்டமடைகின்றனர். பின், ஒரு வழியாக ஆறுதல் கூறி சரி செய்கின்றனர். பின், ஐஸ்வர்யா ரோட்டில் வண்டியில் சென்று பல பிரச்சனைகளை இழுத்து வருகிறார்.

அனைவரும் ஐஸ்வர்யா செய்த சேட்டைகளை சொல்கின்றனர். இதனால் கோபம் அடையும் சிவா ஐஸ்வர்யாவை திட்டுகிறார். ஆனால், ஐஸ்வர்யா தன்னிடம் யாருமே நேரம் செலவழிப்பதில்லை என்று அனைவர் பற்றியும் குறை கூறுகிறார். அதே போல் தான் ஒரு கேம் விளையாட முடிவு செய்திருப்பதாகவும் தன்னுடன் அனைவரும் விளையாட வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குடும்பத்தில் இருக்கும் அனைத்து ஜோடிகளும் தங்களது ஜோடியை ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அப்போது சிவா சஹானாவை மிகவும் அழகாக ப்ரொபோஸ் செய்கிறார். சஹானாவிற்கு சிவா மேல் இருக்கும் காதல் மேலும் அதிகமாகிறது. இப்படியாக இருக்க மீண்டும் நீலகண்டனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடுகிறது. பின், டாக்டர் வந்து பிபி அதிகமாகி விட்டது என்று கூறி அனைவர் மனதிலும் பாலை வார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here