விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி சீரியல் நாளையோடு முடிவடையுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.
காற்றின் மொழி
காற்றின் மொழி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. சஞ்சீவ் மற்றும் பிரியங்கா தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி வந்தனர். வாய் பேச முடியாமல் இருக்கும் நாயகி மீது சந்தோஷ்க்கு காதல் ஏற்படுகிறது. மேலும் நாயகி தொடர்ந்து இன்னல்களை தாங்கிக்கொண்டுள்ளார். சொந்த அப்பவே வெறுக்கும் அளவிற்கு அவரது நிலை இருந்தது. இது எதுவுமே தெரியாமல் சந்தோஷ் கண்மணியை விரும்ப அதனால் நடக்கும் விபரீதம் தான் கதையாக ஓடிக்கொண்டிருந்தது.
இப்படி பல திருப்பங்களுடன் வெளியான காற்றின் மொழி சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதாவது கடைசி நேரத்தில் சந்தோஷ் மற்றும் கண்மணிக்கு திருமணம் நடந்து விடுகிறது. இடையில் தீபிகா வந்து தடுத்தாலும் போலீஸ் சரியான நேரத்தில் வந்து காப்பாற்றுகின்றனர். தீபிகாவையும் அவரது அப்பாவையும் போலீஸ் கைது செய்கின்றனர்.
வித்தியாசமான “மீன் மஞ்சூரியன்” ரெசிபி – செஞ்சு தான் பாருங்களேன்!!
அதன் பிறகு சந்தோஷ் கண்மணி திருமணம் நடைபெறுகிறது. இந்த எபிசோடு நாளையொடு முடியவடையுள்ளது. இந்த சீரியலுக்கு பதிலாக தான் வேலம்மாள் என்ற சீரியல் ஆரம்பமாகவுள்ளது. ஒரு பக்கம் ரசிகர்களுக்கு சந்தோசமாக இருந்தாலும் மறுபக்கம் காற்றின் மொழி சீரியல் முடிவடைந்ததை பார்த்து வருத்தத்தில் உள்ளனர்.