தனுஷின் மூன்றாவது ஹிந்தி பட படப்பிடிப்பு நிறைவு – ரிலீஸ் தேதிக்காக ஆவலில் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் தற்போது நடித்து வந்த ஹிந்தி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக அந்த திரைப்படத்தின் நாயகி தெரித்துள்ளார். இதனை அடுத்து அந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.

தனுஷின் மூன்றாவது ஹிந்தி படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக தற்போது இருந்து வருபவர் தான், தனுஷ். சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து இவர் வந்தவர் தான் என்றாலும், இவர் சந்தித்து வந்த சோதனைகள் அதிகம். முதன் முதலாக, இவர் தனது அண்ணன் இயக்கிய “தேவதையை கண்டேன்” திரைப்படத்தில் தான் நடித்தார். அதனை ஆண்டுகள் தமிழ் சினிமா மற்றும் ரசிகர்கள் பார்த்து வந்த கதைக்களத்தில் இருந்து மாறுபட்டு இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தில் நடிகர் தனுஷின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து தனுஷ் வெற்றி படங்களை கொடுத்து வந்தார். நடுவில், இவரது படங்கள் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை என்றாலும் தனது விடாமுயற்சியின் மூலமாக தற்போது ஹிந்தி பட உலகில் நடிக்கும் அளவிற்கு இவர் முன்னேறியுள்ளார். தனுஷ் தற்போது ஹிந்தி பட இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் “அத்ரங்கி ரே” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

‘இவங்க என்ன விரும்புறதுக்கு காரணமே இது தான்’ – ராஷ்மிகா ஓபன் டாக்!!

இந்த திரைப்படத்தில் இவருடன் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடிகை சாரா அலி கான் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் தனக்கான காட்சிகளை தனுஷ் எப்போதோ முடித்து கொடுத்து விட்டாராம். ஆனால், தற்போது இந்த திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதாக நடிகை சாரா அலி கான் தற்போது தெரிவித்துள்ளார். இதனால் நடிகர் தனுஷை மீண்டும் ஹிந்தி திரைப்படத்தில் பார்க்க ரசிகர்கள் தயாராகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here