இன்று மொழிவாரியாக இல்லாமல் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகை என்றால் அது, நடிகை ராஷ்மிகா மந்தனா தான். இவர் தற்போது தன்னை எதற்காக அனைத்து தரப்பு இளைஞர்களுக்கும் பிடித்திருக்கிறது என்பது குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.
நடிகை ரஷ்மிகா மந்தனா
தெலுங்கு திரைப்பட பாடல் ஒன்றின் மூலமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கட்டி போட்டவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது எதார்த்தமான நடிப்பின் மூலமாக திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஒரு சில ஆண்டுகளில் முன்னணி நடிகைகளுடன் நடித்து விட்டார். அவர் முதன் முதலாக விஜய் தேவருகொண்டவுடன் “கீதா கோவிந்தம்” என்ற திரைப்படத்தில் தான் நடித்தார். பின், தொடர்ச்சியாக கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து விட்டார்.
‘நீட் குறித்த முறைகேடுகளை சிபிஐ கண்காணிக்கும் என நம்பிக்கை உள்ளது’ – நீதிமன்றம் அதிரடி!!
இப்படியாக இருக்க இவர் முதன் முறையாக நடிகர் கார்த்தியுடன் “சுல்தான்” திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. பல வித சுவாரஸ்ய கமெண்டுகள் அந்த ட்ரைலருக்கு கிடைத்தது. அதனை விட ராஷ்மிகா மந்தனா நடித்த முதல் தமிழ் திரைப்படம் இது தான் என்பதால் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடிகர் கார்த்தி கூட ராஷ்மிகா மந்தனா பற்றி புகழ்ந்து கூறியிருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படியாக இருக்க, ராஷ்மிகா மந்தனா தன்னை எதற்காக அனைத்து தரப்பு இளைஞர்களுக்கும் பிடித்திருக்கின்றது என்பது குறித்து ஓபன் டாக் ஒன்றினை கொடுத்துள்ளார். அதாவது அவர் வேலை என்று வந்து விட்டால் தனது குடும்பம், நண்பர்கள் என்று கவனத்தினை திசை திருப்ப மாட்டாராம். அதே போல் ஒரு விஷயத்தினை எடுத்து கொண்டால் அதற்காக கடினமாக உழைக்கவும் தயங்க மாட்டாராம். “நான் நானாக இருப்பதால் தான இளைஞர்கள் என்னை விரும்புகிறார்கள்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.