புதையல் தேடுவதற்காக 50 அடி குழிதோண்டி மூச்சு திணறி இருவர் பலி – தூத்துக்குடியில் நடந்த கொடூரம்!!

0

தூத்துக்குடி பகுதியில் மாந்த்ரீக நம்பிக்கையால் புதையலை தேடி 50 அடிக்கும் மேலாக குழி தோண்டி உள்ளே பணி புரியும் பொழுது மூச்சு திணறலால் இருவர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடி:

இன்றைய காலத்தில் என்ன தான் அறிவியல் வளர்ந்தாலும் இன்னும் மாந்த்ரீகம் என்னும் மூடநம்பிக்கையை சிலர் நம்பி தான் வருகின்றனர். மேலும் மக்களின் ஆசையை தூண்டும் வகையிலும் சிலர் போலியான மாந்த்ரீகத்தை கூறி மக்களிடம் பணத்தை பறித்து வருகின்றனர். தற்போது இதுபோல் ஓர் நிகழ்வால் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் வசித்து வருகிறார் முத்தையா என்பவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரது வீட்டில் தங்க சுரங்கம் இருப்பதாக மாந்திரீகம் செய்பவர் கூறியுள்ளார். இதனை நம்பி முத்தையாவின் இரண்டு மகன்கள் மற்றும் ரகுபதி மற்றும் நிர்மல் கணபதி ஆகிய நான்கு பெரும் வீட்டில் சுமார் 6 மாத காலமாக குழி தோண்டி சுரங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சுமார் 50 அடிக்கும் மேலாக குழியை தோண்டியுள்ளனர். மேலும் சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் மழை பெய்துள்ளது. இதனால் அந்த குழிக்குள் தண்ணீர் சூழ்ந்தது.

ரேஷன் கார்டுக்கு இலவச செல்போன் திட்டம் என்னாச்சு – அதிமுக நிறைவேற்றாத வாக்குறுதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

இருந்தும் கூட அந்த தண்ணீரை வெளியேற்றி அந்த நான்கு பேரும் மீண்டும் சுரங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று யாரும் எதிர்பாராத வகையில் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அந்த நான்கு பெரும் மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்தனர். பின்பு இவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொழுது ரகுபதி மற்றும் நிர்மல் உயிரிழந்துள்ளனர். தற்போது மற்ற இருவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியை உலுக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here