விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை வைஷாலி தான் எதற்காக அந்த சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற தகவலை தற்போது தெரிவித்துள்ளார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் என்றால் அது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தான். இந்த சீரியலில் நாம் பின்பற்றி வந்த கூட்டு குடும்ப வாழ்க்கையினை எதார்த்தமாக எடுத்து காட்டியிருப்பர். இதன் காரணமாக அந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் தான்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது எதார்த்தமான நடிப்பின் காரணமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து உள்ளனர். இப்படியாக இருக்க அந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை வைஷாலி நடித்தார். இவர் இதற்கு முன்னதாக சில படங்களிலும் சில திரைத்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ராஜாராணி” தொடரில் நடிகர் சஞ்சீவிற்கு தங்கையாக நடித்தார்.
இப்படியாக இருக்க இவர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் இருந்து திடீர் என்று நீக்கப்பட்டார். இது குறித்து எந்த வித தகவலும் ரசிகர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து ஐஸ்வர்யா தரப்பில் இருந்தும் எதுவும் கூறப்படவில்லை. இது குறித்து தற்போது தான் வைஷாலி பேசியுள்ளார்.
என்ன தான்டா நடக்குது அங்க?? புதுவையில் தலைமை செயலாளர் பதவி நீக்கம்!!!
அவர் கூறியதாவது, ” ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நான் சில காட்சிகளில் சில நாட்கள் மட்டுமே நடித்தேன். ஆனால், எனக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகியுள்ளனர். உங்களது ஆதரவிற்கு நன்றி. “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து என்னை எதற்காக விலக்கினர்கள் என்று தெரியாது. அதே போல் அதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமும் எனக்கு இல்லை” இவ்வாறாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் வேதனையில் உள்ளனர்.