தற்போது தமிழகத்தில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலை கட்டுவதற்காக தமிழக முதலமைசார் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல்லை நாட்டியுள்ளார். தற்போது இது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி:
ஆந்திராவில் புகழ்பெற்ற கோவிலாக திகழ்வது தான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசித்து விட்டு செல்வார்கள். தற்போது இந்த கோவிலை தமிழகத்தில் கட்டுவதற்கு முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் ஏழுமலையான் கோவிலை கட்டுவதற்கான நிர்வாக அனுமதியை வழங்குமாறு ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதினார் எடப்பாடி பழனிச்சாமி.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் இதற்காக அதிமுக எம்எல்ஏ குமரகுரு தனது 4 ஏக்கர் நிலத்தையும் வழங்கினார். தற்போது அனுமதி வழங்கப்பட்ட நிலையில் உளுந்தூர்பேட்டையில் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலை கட்டுவதற்கு பூமி பூஜை மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வருக்கு பூர்ண கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது. கோவில் கட்டுவதற்கான அளவீடு பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. முன்னதாக நேற்று மாலை 50கும் மேற்பட்ட பட்டாச்சார்யார்கள் முன்னிலையில் யாக பூஜையும் நடந்தது.
‘கொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்’ – மத்திய அரசு வலியுறுத்தல்!!
மேலும் இன்று காலை இரண்டாம் மற்றும் மூன்றாவது யாகசாலை பூஜைகளும் நடந்தது. தற்போது கோவிலை கட்டுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல்லை நாட்டியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம், அறங்காவல் குழு உறுப்பினர் குமரகுரு, அறங்காவல் குழு தலைவர் சுப்பா ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் அங்குள்ள கோவில் கல்வெட்டையும் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இதற்காக அங்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.