தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தான் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படவாய்ப்புகளுக்காக போராடும் யாஷிகா தொடர்ந்து தனது வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் பின் போஸில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த பலரும் கிறங்கி தான் போயுள்ளனர்.
யாஷிகா ஆனந்த்
மாடலிங் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் யாஷிகா ஆனந்த். மும்பை பெண்ணான இவர் தமிழில் நடிக்க வேண்டும் என்று தான் சென்னைக்கு வந்தாராம். அவருக்கு பள்ளி பருவத்திலேயே ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
ஆனாலும் அந்த படம் ஹிட் அடிக்கவில்லை. தொடர்ந்து தனது விடாமுயற்சியால் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் ‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வயதில் யாரும் நடிக்க தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் யாஷிகா.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான் அவருக்கு 19 வயது தான் ஆகிறது என்றே அனைவர்க்கும் தெரியும். பிக் பாஸ் வீட்டில் தனது அனைத்து முயற்சிகளையும் செய்து வந்தார் யாஷிகா.
வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் கூட 5 லட்சம் பரிசு பணத்தை பெற்றுக்கொண்டு தான் சென்றார். அடுத்தடுத்து யாஷிகாவிற்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் கதையம்சம் அவருக்கு பொருந்தாமலே இருந்தது. இதனால் படமும் ஹிட் ஆகவும் இல்லை.
தடாலடியாக அதிகரிக்கும் ஆபரணத்தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!
பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் ஒரு பாட்டுக்கு நடனமாடுவது, கெஸ்ட் ரோல் போன்றவற்றை செய்து வந்தார். படவாய்ப்புகளுக்காக தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த்.
இவன் தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய் மற்றும் பாம்பாட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.