தடாலடியாக அதிகரிக்கும் ஆபரணத்தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

0

கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று முதல் மீண்டும் உயர தொடங்கியுள்ளது. தற்போது சென்னையில் இன்று மாலை நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளார்கள்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. இதனால் சுபநிகழ்ச்சிகள் நடத்துவோர்கள் தங்கள் இல்ல விழாவிற்கு நகைகளை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வந்தனர். பின்பு கடந்த பண்டிகை காலம் முதல் ஆபரணதங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வந்தது. இதனால் நகை பிரியர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். தற்போது இன்று காலை அதிரடியாக தங்கத்தின் விலை அதிகரித்தது. இன்று மாலை நிலவரப்படியும் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் சோகம் அடைந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘தமிழகத்தை கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்’ – பன்னீர் செல்வம் ட்வீட்!!

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.576 உயர்ந்துள்ளது. இதன்மூலம் தற்போது 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 36,296க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.72 உயர்ந்து தற்போது 1 கிராம் ரூ. 4,537 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் மாலை நிலவரப்படி 1 கிராம் வெள்ளி 1.60 காசுகள் உயர்ந்து ரூ.75.20 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி தற்போது ரூ.75,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here