காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் சிகிச்சை மேற்கொண்டு வந்தார் ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். தற்போது அவருக்கு ஏற்பட்ட காயம் குணமாகியதால் இந்தியாவிற்கு எதிரான முன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பர் என்று அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்தியா vs ஆஸ்திரேலியா:
தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பலர் காயம் காரணமாக விலகியுள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவர் இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் போது முதுகில் ஏற்பட்ட வலியினால் பெவிலியன் திரும்பினார். மேலும் அதற்காக தீவிர சிகிச்சையை மேற்கொண்டார். இவர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் தற்போது சிட்னியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வார்னர் அங்கு இருந்து வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டார். ஆதன் பின்பு இவர் இந்தியாவிற்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது உடல் நிலை முழுவதும் நலமாகத நிலையில் அவர் பங்கேற்கவில்லை. இப்பொது அவர் முழுவதுமாக குணமாகி உள்ளார்.
‘நான் சென்னை சென்றதும் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன்’ – கமல்ஹாசன் பேட்டி!!
எனவே வரும் 7ம் தேதி நடக்கவிற்குக்கும் இந்தியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பர் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இவரது வருகையால் ஆஸ்திரேலிய அணி பலமாக காணப்படுகிறது. மேலும் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள். காயம் காரணமாக இவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்காதது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.