கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்குபவர்கள் மற்றும் நகை பிரியர்கள் வருத்தத்தில் உள்ளார்கள். மேலும் சென்னையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை:
இந்த கொரோனா காலங்களில் அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. குறிப்பாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் மக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் வருத்தத்தில் உள்ளார்கள். மேலும் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக நகை வாங்குவதில் மக்கள் தயக்கம் அடைந்துள்ளார். மேலும் சில நாட்களில் தங்கத்தின் விலை குறைந்தாலும் அதன் தாக்கம் பெரிதாக தெரிவதில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நேற்று காலை தங்கத்தின் விலை சிறிது குறைந்தாலும் நேற்று மாலை தங்கத்தின் விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை, ஒரு கிராம் ரூ.4725க்கு விற்பனை செய்யபடுகிறது. நேற்றைய விலையில் இருந்து சுமார் 7 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் நேற்றைய நிலவரப்படி 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.37,744க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அதிலிருந்து சுமார் 56 ரூபாய் உயர்ந்து ரூ.37,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதுவும் நேற்றைய நிலவரத்தில் இருந்து 1 கிராமுக்கு சுமார் 7 ரூபாய் உயர்ந்து இன்று 1 கிராம் ரூ.5,109க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 8 கிராம் தூய தங்கத்தின் விலை 60 ரூபாய் உயர்ந்து இன்று ரூ.40,872 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போலவே வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.72.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.72,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.