‘சித்ராவின் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ – சித்ராவின் தாயார் முதல்வரிடம் மனு!!

0

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து தொடர்ந்து பல பல மர்மங்கள் வெளியான வண்ணம் இருந்தது. பல பிரபலங்களின் பெயரும் இதில் அடிபட்டது. இந்நிலையில் சித்ராவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க முதலமைச்சருக்கு சித்ராவின் அம்மா அனுப்பியுள்ளார்.

சித்ரா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. பல சேனலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையால் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் சித்ரா. தனது இத்தனை நாள் முயற்சியில் மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு புகழ் பெற்றவர் சித்ரா. புகழின் உச்சத்தை தொடும் வேளையில் திடீரென அவர் தற்கொலை செய்துக்கொண்டது அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சித்ரா தற்கொலை செய்யும் போது ஹேமந்த் உடனிருந்ததால் அவர் காரணமாக இருக்குமோ என்று தீவிர விசாரணை நடத்தினர். அதன் பிறகு ஹேமந்த் கொடுத்து வந்த மனஉளைச்சலே சித்ராவின் தற்கொலைக்கு காரணமாக இருந்துள்ளது தெரிய வந்தது. சித்ராவின் பேச்சே கம்மியாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். சித்ராவின் தயார் அவரின் இறப்பு ஹேமந்த் தான் காரணம் என ஆணித்தனமாக கூறினார். மேலும் ஹேமந்த் தந்தை சித்ரா மீது பழியை போட ஆரம்பித்தார்.

ஸ்ருதியை பார்த்து கதறி அழுத ரியோ – பாசப்போராட்டங்களுடன் வெளியான பிக் பாஸ் ப்ரோமோ!!

இதில் எது உண்மை என்பது மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. இந்நிலையில் சித்ராவின் தயார் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சித்ராவின் தற்கொலைக்கு நியாயம் கிடைத்தே ஆக வேண்டும் என்றும் பலரும் கதறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here