இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் தொடங்க உள்ளது. இதில் விளையாட உள்ள 11 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 17ஆம் தேதி இந்த அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. தற்போது நாளை மெல்போர்னில் 2வது டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இதனை வரலாற்று சிறப்புமிக்க ‘பாக்ஸிங் டே’டெஸ்ட் போட்டி என்று அழைக்கின்றனர்.
பாக்ஸிங் டே:
கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் இந்த போட்டி துவங்குவதால் இதனை பாக்ஸிங் டே என்று அழைக்கின்றனர். இதற்கு வரலாற்று சிறப்புமிக்க கதைகள் உள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அணைத்து தேவாலயங்கள் முன்பு ஓர் பெட்டியை வைத்திருப்பர். தேவாலயங்களுக்கு வருபவர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை அந்த பெட்டியில் போட்டு செல்வார்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கிறிஸ்துமஸ் மறுதினம் அன்று அந்த பெட்டியை திறந்து அதில் இருக்கும் பணத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவார்கள். பெட்டியை திறக்கும் நாள் என்பதால் இது பாக்ஸிங் டே என்று அழைக்கப்படுகிறது. மேலும் பல காரணங்களும் இதற்கு உண்டு. இந்திய அணி நாளை விளையாடப் போகும் போட்டியில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு அணிகளும் தங்களது வெற்றியை பதிவு செய்வதற்காக பெரும் முனைப்போடு காத்துக் கொண்டிருக்கிறது.
மெல்போர்ன் சுமார் 90 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் அளவிற்கு பெரிய மைதானம். ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 30 ஆயிரம் பேருக்கு மற்றும் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணி அளவில் ஆரம்பிக்கும். இதனை சோனி சிக்ஸ் மற்றும் சோனி 10 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றது. தற்போது இதில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய 11 அணி விபரம்:
ரஹானே (C), மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, சுப்மங் கில், ரிஷப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமத் சிராஜ் மற்றும் பும்ராஹ். முகமது ஷமி காயத்தால் போட்டியில் இருந்து விலகிய காரணத்தால் ஷிராஜ் அறிமுக வீரராக களமிறக்கப்பட உள்ளார்.