Saturday, May 25, 2024

கேரளாவில் பரவும் பாக்டீரியா நோய் – 11 வயது சிறுவன் பலி, 20 பேர் பாதிப்பு!!

Must Read

கொரோனா பரவல் இன்னும் மக்களை அச்சுறுத்தி வரும் வேளையில் கேரளாவில் அடுத்த கட்டமாக ஒரு பாக்டீரியா பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பால் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் இந்த நோயினால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நோய் பரவலால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

பாக்டீரியா நோய் தொற்று பரவல்:

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் இந்தியாவில் குறைந்து வருகின்றது. இதனால் மக்கள் தற்போது தான் அச்சம் இன்றி இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். இப்படியான நிலையில் கேரளாவில் உள்ள ஒரு 11 வயது சிறுவன் ஒரு பாக்டீரியா நோய் பரவலால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளான். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிப்பட்டுள்ளான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களில் அந்த சிறுவன் மரணம் அடைந்து விட்டான். இந்த சிறுவனை போலவே அந்த பகுதியினை சேர்ந்த 20 பேர் இந்த பாக்டீரியாவால் பாதிப்படைந்துள்ளனர். இதனை அடுத்து விசாரித்து பார்த்ததில் இவர்களுக்கு இருப்பது “ஷிகெல்லா பாக்டீரியா” தொற்று என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று அசுத்தமான நீரினை அருந்துவதாலோ அல்லது பழைய உணவினை உட்கொள்வது மூலமாகவோ பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவினால் ரூ.5 லட்சம் பரிசு – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!!

இது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயஸ்ரீ கூறுகையில், “இந்த நோய் பாதிப்பு அசுத்தமான உணவினை உட்கொள்வது மூலமாக தான் பரவும். பாதிக்கப்பட்ட சிறுவனின் தொடர்பில் இருந்தவர்களுக்கு தான் இந்த தொற்று பரவி உள்ளது. இந்த நோய் பரவலுக்கான காரணத்தை மருத்துவ முகாம் அமைத்து விரைவில் கண்டறியவுள்ளோம். இந்த தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள மக்கள் சுகாதாரமாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சை மேற்கொண்டால் பூரணமாக குணம் பெறலாம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

KKR vs SRH இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை ரிப்போர்ட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா நைட்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -