Saturday, May 11, 2024

‘ஆஸ்திரேலியா டூ கைலாசா’ இலவச விமான சேவை?? நித்யானந்தா புதிய அறிவிப்பு!!

Must Read

போலி சாமியார் நித்யானந்தா தற்போது வசித்து வரும் கைலாச நாட்டிற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து இலவச விமான சேவை வழங்க உளளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.  நித்தியானந்தா மீது கொலை, கொள்ளை போன்ற வழக்குகள் இருக்கும் நிலையில் அவர் இவ்வாறாக அறிவித்துள்ளது அனைவரையும் ஆச்சிரியம் அடைய வைத்துள்ளது.

போலி சாமியார் நித்தியானந்தா:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல போலி சாமியார்கள் அதிக அளவில் உருவாகினர். அதில் ஒருவர் தான், நித்தியானந்தா. அவர் மீது கொலை, கொள்ளை மற்றும் பாலியல் பலாத்காரம் உட்பட பல வழக்குகள் உள்ளது. இப்படியான நிலையில் அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால், அவர் கூறிவரும் நாடு எங்கு உள்ளது என்று இதுவரை யாருக்கும் தெரியாது. அவரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். இவர் அவ்வப்போது தனது நாடு குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டு வருவார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் தற்போது அவர் பேசும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அவர் கைலாஷாவிற்கு வர விரும்பும் பக்தர்கள் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம் என்றும் கைலாஷாவிற்கு வர எந்த வித கட்டணமும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆஸ்திரேலியா வந்து விட்டால் போதுமாம். அங்கிருந்து கைலாஷாவிற்கு இலவசமாக அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர விருப்பமுள்ளவர்கள் செய்ய வேண்டியதாக அவர் குறிப்பிட்டிருப்பது,

  • ஆஸ்திரேலியாவிற்கு சொந்த செலவில் வர வேண்டும். அங்கிருந்து “கருடா” என்ற விமான சேவை மூலமாக இலவசமாக கைலாஷாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
  • அங்கு 3 நாட்கள் தங்கிக் கொள்ளலாம். அதற்கு மேல் தங்க முடியாது.
  • 3 நாட்கள் முடிந்ததும், அவர்களை கைலாச அமைப்பினர் மீண்டும் வந்து ஆஸ்திரேலியாவில் விட்டு சென்று விடுவார்களாம்.
  • வருகை தர விருப்பமுள்ளவர்கள் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க தங்களது விபரங்களை அனுப்பி வைக்க வேண்டுமாம்.

இது அனைவர் மத்தியில் ஆச்சிரியம் மற்றும் ஒரு பக்கம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கினை நினைத்து வருத்தமும் அடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -