அரசியல் கட்சியில் இணைவது நிச்சயம், விரைவில் அறிவிப்பு வெளியாகும் – திவ்யா சத்யராஜ் அதிரடி!!

0

“விரைவில் தான் அரசியல் கட்சியில் இணைந்து மக்களுக்கு தொண்டு செய்யவிருப்பதாகவும், எந்த கட்சியில் இணையப்போகிறேன் என்பதை சில நாட்கள் கழித்தே வெளியிடுவேன்” என்றும் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

திவ்யா சத்யராஜ்

நடிகர் சத்தியராஜின் மகளும் , நடிகர் சிபி சத்யராஜின் சகோதரியுமான திவ்யா சத்யராஜ் பிரபல ஊட்டச்சத்து நிபுணராவார். இவர் கொரோனா காலத்தில் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவினை இலவசமாக வழங்க “மகிழ்மதி” என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மருத்துவ நுழைவுத்தேர்வு மற்றும் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் மூலம் அப்போது மிக பிரபலமாக பேசப்பட்டார். தொடர்ந்து சமுதாய பணிகளில் ஈடுபட்டுவரும் அவர், தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நேரடியான நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயத்துறை அமைச்சரிடம்  கோரிக்கை வைத்துள்ளார்.

சத்யராஜ் பெருமிதம்

தனது மகளின் அரசியல் வருகை குறித்து சத்யராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அதில் அவர் திவ்யா அரசியலுக்கு வந்தால் தனது ஆதரவு எப்போதும் அவருக்கு இருக்கும் எனவும் ,ஒரு தகப்பனாக என் குழந்தைகள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையை உள்ளது, என் மகளை மிகவும் தைரியமான பெண்ணாக வளர்த்துள்ளேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக மிகப்பெரும் வெற்றியை அடைத்திருக்கும் எனது மகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

‘கமல் நாட்டை ஆள நினைத்தால், ஒரு குடும்பமும் உருப்படாது

மேலும் அவர், தனது மகளின் அரசியல் பாதையில்  நல்ல நண்பனாகவும், வழிகாட்டியாகவும், பக்கபலமாகவும் இருப்பேனென்றும் , அவர் வெற்றிக்காக நிச்சயம் பிரச்சாரம் செய்வேனென்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திவ்யா திமுக.,வில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது “எந்த கட்சியில் சேர்வது என்ற எனது முடிவு குறித்த தகவலோ அறிக்கையோ இதுவரையில் நான் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் எனது தரப்பிலிருந்து வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here