இந்திய அணி வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டம் இன்று இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய அணி 194 ரன்கள் அடித்துள்ளது. இந்த போட்டியில் பும்ரா அரைசதம் விளாசி உள்ளார்.
பயிற்சி ஆட்டம்:
வரும் 17 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளன. இதற்கான பயிற்சி ஆட்டம் இன்று ஆஸ்திரெலிவில் உள்ள சிட்னியில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா அணி வீரர்களின் அபாரமான பந்து வீச்சு காரணமாக இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவருக்கு பின்பாக சுப்மன் கில் களம் இறங்கினார். அவர் பிருத்வி ஷாவுடன் இணைந்து இருவரும் நன்றாக விளையாடினர். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து 40 & 43 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இவர்களுக்கு அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுடன் வெளியேறினர்.
இவர்களுக்கு அடுத்து கடைசியாக களம் இறங்கிய பும்ரா மற்றும் சிராஜ் நிதானமாக விளையாடினர். பும்ரா இந்த போட்டியில் அரைசதம் அடித்துள்ளார். சிராஜ் 22 ரன்களில் ஆட்டம் இழந்ததால் போட்டி முடிவிற்கு வந்தது. சிராஜ் விலையிடும் போது அதி வேகமாக பந்து வீசியதால் ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் தலையில் அடிபட்டு விட்டது. இதனால் உடனடியாக சிராஜ் சென்று கேமரூனிடம் மன்னிப்பு கேட்டார்.
உடற்தகுதியை நிரூபித்த ரோஹித் சர்மா – ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பாரா??
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 16 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 56 ரன்களுடன் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.