உங்க தலைமுடி அடர்த்தியா, ஷைனிங்கா வளரணுமா இந்த ஒரு டிப்ஸ் மட்டும் செய்ங்க…வித்தியாசத்தை நீங்களே பாருங்க.. சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் இருக்குற ஒரு பொதுவான பிரச்சனை என்னனு பாத்தீங்கன்னா முடி கொட்டுறது தாங்க. “ஆள் பாதி ஆடை பாதி”ன்ற பழமொழி இப்போ உள்ள காலகட்டத்துல ரொம்ப பொருந்துங்க. அப்படி இருக்கிறப்ப நாமளும் நம்ம உடம்பையும், அழகையும் நல்ல பராமரிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கோம். ஆனா இப்போ இருக்குற நவீனமான உலகத்துல யாருக்கும் இதெல்லாம் வீட்ல செய்றதுக்கு நேரம் இல்லைங்க..காச செலவு பண்ணி அழகு நிலையங்களுக்கு தான் போறாங்க.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆப்பிளே சைடர் வினிகர் ஒன்னு மட்டும் வைச்சு நம்மளோட தலைமுடிய ஈசியா, வீட்லயே அழகா, ஷைனிங்கா, அடர்த்தியா மாத்தலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் சைடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை தலையின் ஸ்கேப்ல் தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் ஊற விட வேண்டும். பிறகு, ஒரு மைல்டான ஷாம்பு வைத்து தலையை அலச வேண்டும். இதே போல் ஒரு வாரத்தில் 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும். இதை தொடர்ந்து செஞ்சோம்னா நம்ம தலைமுடி வலிமையா, அழகா, ஷைனிங்கா மாறிடும்.