விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம் போல பல கலகங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது கால் சென்டர் டாஸ்கை கொடுத்து பிக் பாஸ் போட்டியாளர்களிடையே பல சண்டைகள் ஏற்படுத்தி வருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் ப்ரோமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன வாரம் நடந்த கால் சென்டர் டாஸ்க் தான் ஓடிக்கொண்டுள்ளது. கடந்த வாரத்தில் கால் சென்டரில் இருந்தவர்கள் எல்லாம் கஸ்டமராக மாறியுள்ளனர். இந்நிலையில் 2 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பாலாவும் ஆரியும் கூட நேரடியாக மோதிக்கொண்டனர். பாலா ஆரியை சரமாரியாக பல கேள்விகளை கேட்டார். இதனால் ஆரியின் ரசிகர்களும் கடுப்பானார்கள். இந்நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது ரியோ கால் சென்டர் டீமில் தான் உள்ளார்.
அனிதா ரியோவுக்கு கால் செய்து சரமாரியாக கேள்வி கேட்கிறார். இதற்கு ரியோவும் கோவமடைகிறார். அதாவது நீங்க தனியா தான் விளையாடுறிங்களா?? குரூப்புக்கு உள்ளேயே தான் இருக்கீங்க. யாராவது பேசுனா கூட உட்கார வச்சுடுறீங்க. இப்படி உங்கள பத்தின பாதி விஷயங்களை மட்டும் காட்டிட்டு நான் ஜெயிக்கணும் சொன்ன இதெல்லாம் நியாயமா இருக்கா?? என்று நேரடியாகவே கேட்டு விடுகிறார்.
இதனால் ரியோவிற்கு கோவமும் வருகிறது. மேலும் அடுத்த ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதில் இந்த டாஸ்கில் சரியாக செய்து முடித்தவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிலிருந்து பதிமூன்று வரை வரிசைப்படுத்த வேண்டும் என்று பிக் பாஸ் கூறியுள்ளார். அதன் படி நிற்க பலரும் சண்டையிட்டு வருகின்றனர்.
பாலாஜி, ரம்யா கேபி என பலரும் தனக்கு தான் இந்த இடம் என்றும் போட்டி போட்டு வருகின்றனர். ஆனாலும் நாளுக்கு நாள் பிக் பாஸ் வீட்டில் சுவாரசியம் கம்மியாக தான் போயிக்கொண்டுள்ளது என ரசிகர்கள் கருத்தாக உள்ளது.