இன்றைய காலகட்டத்தில் குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ பிரியராகவே இருக்கின்றனர். இதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அதிக அளவு அசைவத்தை எடுப்பதால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நோய் தொற்றும் விரைவாக ஏற்படுகிறது. அதனால் சைவத்தில் இந்த மாதிரி செய்து கொடுங்கள் கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இப்பொழுது காளானை வைத்து புதுவிதமான ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
காளான்
முட்டை – 2
பட்டை
கிராம்பு
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
தக்காளி – 1
வெங்காயம் – 1
கொத்தமல்லி
செய்முறை
முதலில் காளானை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது அதனை சதுரமாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். மேலும் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். அது பொன்னிறமாக வதங்கியதும்.
தக்காளியை சேர்த்து வதக்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும். இப்பொழுது மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து வதக்கவும். வரை வதக்கியதும் அதில் காளானை சேர்த்து வதக்கவும். இப்பொழுது அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
5 நிமிடங்களுக்கு பிறகு கிரேவி பதத்திற்கு வரும் அப்பொழுது முட்டையை அதில் ஊற்றி மூடி வைக்கவும். 10 நிமிடங்கள் அடுப்பை குறைந்த தீயில் வைத்து கொள்ளவும். 10 நிமிடங்களுக்கு பிறகு இறக்கினால் முட்டையும் நன்கு வெந்திருக்கும் முட்டை உடையாமல் காளானுடன் சேர்த்து எடுத்து பரிமாறினால் முட்டை காளான் கிரேவி தயார்.