நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் குற்ற வழக்கில் சிறையில் உள்ள 4 கைதிகளுக்கு வரும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நிர்பயா வழக்கு விபரம்:
டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2013-ம் ஆண்டு சிறையில், ராம்சிங் என்ற குற்றவாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 வயதை எட்டாத ஒருவர் 3 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலம் முடிந்த பிறகு, அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.
எஞ்சியுள்ள நான்கு குற்றவாளிகளான அக்ஷய் குமார் சிங், முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு முறை தள்ளிப்போனது..!
குற்றவாளிகளுக்கு ஜனவரி 22 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்பு அது பிப்ரவரி 1 என மாற்றப்பட்டது. ஆனால் அந்த இரு தினங்களும் தூக்குத்தண்டனை பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.
இந்நிலையில் தற்போது வரும் மார்ச் 3 அன்று காலை 6 மணிக்கு நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |