2012 குரூப் 2 தேர்வில் முறைகேடா..? விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி..!

0

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது வரை 40 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் குரூப் 2a, VAO மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக தற்போது புகார் எழுந்து உள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு – கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த புரோக்கர் ஜெயக்குமார்..!

2012 குரூப் 2 தேர்வு முறைகேடு..!

2012 ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று வணிக வரித்துறையில் 117 பேர் பணியில் சேர்ந்தனர். இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. எனவே இந்த தேர்விலும் முறைகேடு நடைபெற்று உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.

10,276 போலீஸ் பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும் – தமிழக பட்ஜெட் 2020..!

இந்த தேர்வு நடைபெற்ற பொழுது கடலூர், விழுப்புரம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் கேள்வித்தாள் வெளியானதாக எழுந்த புகாரினால் மறுதேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த மறுதேர்வில் தான் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here