கொரோனா தோற்று நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதனால் மக்கள் பலர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பி அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ் திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்பவர். இவரின் குரலுக்கு பலர் அடிமை என்றே சொல்லலாம். இவர் 1966 இல் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது வரை பல்லாயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார். அதிக அளவு பாடல்களை பாடியதற்கான கின்னஸ் அவார்டையும் அவர் பெற்றுள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர் பாடலை விரும்பாதவர்கள் யாரும் இல்லை.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த அளவிற்கு அவரின் இனிய குரலின் மூலம் மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல தீவிர சிகிச்சைகள் மூலம் ஓரளவிற்கு தேறி வந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால் தற்போது அவர் உடல் நிலை மோசமாகி வருவதாக கூறியுள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், எஸ்.பி.பி க்கு எக்மோ மற்றும் இதர கருவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் அவரின் உடல் நிலை மிகவும் மோசமாகி வருகிறது.
என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அவரின் ரசிகர்கள் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ளனர். அவர் எப்படியும் குணமாகி வருவார் என்று இருந்த மக்களுக்கு தற்போது இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.