கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த TNUSRB உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வு எழுதிய மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அதேபோல் தேர்வு முடிவு குறித்து பல சரமாரியான கேள்விகளையும் எழுப்பி உள்ளனர். இதனால் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியுள்ளனர்.
உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வு:
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் உதவி ஆய்வாளர் பணிக்காக எழுத்துத் தேர்வினை நடத்தியது. தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இந்த தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வுக்காக முடிவுகள் அரசு சார்பில் வெளியிடப்பட்டது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அதில் பல குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்:
இந்த தேர்வு முடிவுகளில் வேலூரை சேர்ந்த 144 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்தடுத்த பதிவு எண்களை கொண்டவர்கள் என்று தெரிகிறது.
KXIP vs RCB: மெதுவாக பந்துவீசிய பெங்களூரு அணி – கேப்டன் விராட் கோஹ்லிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!!
இதன் மூலமாக தேர்வு அறையில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது போன்றே உடல் தகுதி தேர்விலும் 5,275 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 1,254 பேர் முறைகேடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு:
இதனை தொடர்ந்து தேர்வு எழுதிய சதீஷ் மற்றும் ராஜ்குமார் என்ற இரு மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் இருவரும் சில கேள்விகளையும் அரசிடம் கேட்டுள்ளனர். அவை,
- மாநில அளவில் முதல் 25 இடங்களை பிடித்தவர்கள் பெரும்பாலானவர்கள் வேலூர், கடலூர், சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர், அது எப்படி சாத்தியம்?
- தேர்வாணையம் ஓஎம்ஆர் விடைத்தாளை கேட்ட போது தர மறுத்தது ஏன்?
- மாநில அளவில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் சென்னை மதுரவாயில்மையத்தில் தேர்வு எழுதியவர்கள், அது எப்படி சாத்தியம்?
இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதேபோல் முறைகேடு நடந்த இந்த தேர்வினை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வினை நடத்த வேண்டும் என்று மாணவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.