தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மிகுந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை:
கடந்த சில மாதங்களாக வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பநிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் ஆந்திராவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்க இருப்பதால் வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம் இந்த மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:
தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் திருத்தணி பகுதியில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது, கோவை மற்றும் திருப்பத்தூர் பகுதியில் 7 செ.மீ மழையும் வால்பாறையில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறைந்தபட்சமாக காவேரிப்பாக்கம், தேனி, சத்தியமங்கலம் பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.