தன் விருப்பப்படி வாழ்வதற்கு குடும்பத்தினர் தடையாக இருக்கின்றனர் என்று கருத்தி இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தையே கொலை செய்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது??
கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள அரிங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் பென்னி – பெஸ்ஸி என்ற தம்பதியர். இவர்களுக்கு ஆல்பின், 21 மற்றும் ஆன், 16 என்று இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களது மகன் ஆல்பின் வேலை ஏதும் பார்க்காமல் வீட்டில் இருந்துள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
அதே போல் எப்போதும் மொபைல் மட்டுமே பயன்படுத்தி வந்ததால், குடும்பத்தினர் திட்டியுள்ளார். இதனால், ஆல்பின் கோபம் அடைந்துள்ளார். அதனில், தனது குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.
கொலை செய்ய திட்டம்:
கடந்த ஜூலை மாதம் அவர்களை கொலை செய்ய அவர்கள் சாப்பிட்ட கோழிக்கறியில் எல்லி மருந்தை கலந்துள்ளார்.ஆனால், அவர்களுக்கு ஏதும் ஆகவில்லை. வயிற்றுவலி மட்டும் இருந்துள்ளது. உயிருக்கு சேதம் இல்லாமல் தப்பித்துள்ளனர்.
கொரோனா தடுப்புப் பணி ஊழியர் இறந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி!!
இதனால் மேலும் கோபமடைந்த ஆல்பின் இவராகவே ஐஸ்கிரீம் தரித்து அதில் எலி மருந்தை கலந்துள்ளார். இதனை அறியாத குடும்பத்தினர் அதனை உண்டு பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது சகோதரி ஆன் இறந்துள்ளார். அவரது பெற்றோர்கள் மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சந்தேகம் அடைந்த போலீசார்:
ஒரு வீட்டில் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட நிலை, ஆல்பின் மட்டும் நன்றாக இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. விசாரித்து பார்த்ததில் இவ்வாறு ஆல்பின் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரால் கைது செய்துள்ளனர் போலீசார். தனக்கே எல்லா சொத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்துள்ளது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.