சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மறைந்த முதல்வர்களின் பெயர்களை மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு வெளிட்ட அறிக்கை:
கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை மெட்ரோ இரயில் நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டது.
1800 கோடி ரூபாயில் முக்கியமான நிறுவனங்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு படை – உ.பி அரசு திட்டம் !!
அந்த ஆய்வின் முடிவாக சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை இருந்த 23 கிலோமீட்டர் வாயிலான ரயில் திட்டம் மற்றும் சென்ட்ரல் இரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித் தடம் என இரு வழித்தடங்கள் தேர்ந்தெடுக்கபட்டு பின்பு மேற்கொள்ளப்பட்டு, செயல்பட்டதாவும்பட்டது.
எந்த எந்த நிலையங்களுக்கு மாற்றம்:
18,380 கோடி ரூபாயில் இந்த திட்டம் முழுவீச்சாக செயல்படுத்த காரணமாக இருந்தவர் தமிழக முதல்வர், அம்மா. ஜெயலலிதாவை தான் சாரும். பயணிகள் அதிக அளவில், பயன்படுத்தும் ரயில் நிலையங்கள் என்று பார்த்தால் அது ஆலந்தூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ நிலையங்கள் தான், அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இப்படியான இந்த முக்கியமான ரயில் நிலையங்களுக்கு மறைந்த முதல்வர்களின் பெயர்களை வைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் எனக்கருதி தான் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
அறப்பணிகளை நினைவு கூருவோம்:
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம்’ என்று பெயர் வைத்ததைப் போல சென்ட்ரல் மெட்ரோ என்பது ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என்று அழைக்கப்படும். இந்த முடிவு அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூறும் வகையில், இந்த பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.