சென்னையில் இன்றுடன் 11வது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது. வரலாறு காணாத இந்த விலை உயர்வால் பொதுமக்கள் ஆடிப்போய் உள்ளனர். இதனால் தங்கமும் இனி மியூசியத்தில் காட்சிப்பொருளாக தான் பார்க்க முடியும் போல என புலம்பி வருகின்றனர்.
இன்றைய விலை:
கொரோனா பாதிப்பு நம் உடல் நலத்தை மட்டுமில்லாமல், உலக பொருளாதாரத்தையும் ஆட்டி வைத்துள்ளது. இதனால் போக்குவரத்து, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மிகுந்த பாதிப்பு அடைந்து உள்ளன. இந்த சரிவில் இருந்து மீள இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு மத்தியில் கிடுகிடுவென உயர்ந்து வரும் விலைவாசி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 3,464 ரூபாய் அதிகரித்து உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
ஒரு லிட்டர் டீசல் விலை 8 ரூபாய் குறைப்பு – மாநில முதல்வர் அதிரடி!!
இன்றும் சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 32 ரூபாய் உயர்ந்து ரூ.5,125 க்கும், ஒரு சவரன் 256 ருபாய் அதிகரித்து ரூ. 41,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலை வரலாற்றில் இது புதிய உச்சமாகும். வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 71.10 ரூபாயாக உள்ளது. தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து உயர்ந்து வருவதால் வரும் காலங்களில் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.