ஆஸ்கார் விருது பெற்ற பிறகு எனக்கும் படவாய்ப்புகள் குறைந்தது என்றும் பல தயாரிப்பாளர்கள் ” நீங்கள் தேவையில்லை” என்று முகத்தில் அடித்தார் போல் பேசி உள்ளனர், என்று சவுண்ட் என்ஜினீயர் ரசூல் பூக்குட்டி தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட்டில் ” நெபோட்டிசம்” :
கடந்த சில நாட்களுக்கு முன்னால், பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம் அடைந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல், பாலிவுட்டில் அரசியல் நடக்கின்றது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால், பலரும் அடுத்தடுத்து, தாங்களும் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்றும் படவாய்ப்புகள் நாளாக நாளாக குறைந்து வந்தது என்று தெரிவித்து வந்தனர்.
அந்த அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு படவாய்ப்புகள் கிடைக்க கூடாது என்று சிலர் சதி திட்டம் தீட்டி வருகின்றனர் என்று குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு இந்தி இயக்குனர் சேகர் கபூர் “உங்களை எங்களால் ஹண்ட்லே செய்ய முடியவில்லை” என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசூல் குட்டியும் புகார்:
இந்த ட்விட்டர் பதிவை டேக் செய்து ரசூல் பூக்குட்டி கூறி இருப்பதாவது ” எனக்கும் சில பிரச்சனைகள் ஆஸ்கார் வென்றதும் நடந்தது. அதிலும், சில தயாரிப்பாளர்கள் நீங்கள் எங்களுக்கு தேவை இல்லை என்று முகத்தில் அடித்தார் போல் கூறினர்.இப்படி பாலிவுட் தான் செய்தது, மற்ற மொழி தயாரிப்பாளர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து ஊக்கப்படுத்தி வந்தனர். நான் இந்த தொழிலை நேசிக்கிறேன், எனக்கு இந்த தொழில் நேசிக்க கற்றுகொடுத்து உள்ளது.” இப்படியாக அவர் தெரிவித்து உள்ளார்.