சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாரிசு அரசியல் தொடர்பாக அனைத்துத் திரையுலகிலிருந்தும் முன்னணி நடிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் கவலை :
கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி படம், தில் பெச்சாரா. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. தவறானச் செய்திகளைப் பரப்பி வருகிறது. ” அன்று கவலை தெரிவித்தார். காணொளியாகக் காண ⇒⇒⇒ என் படவாய்ப்புகள் தடுக்கப்படுது !! A.R.ரஹ்மான் புகார்
இதையடுத்து ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். சமுக வலைதளங்களில் #ARRahman என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இயக்குநர் சேகர் கபூரின் கருத்து :
தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய செய்தியைப் பகிர்ந்து நடிகரும் இயக்குநருமான சேகர் கபூர் தனது ட்விட்டர் பதிவில், “உங்களுடைய பிரச்சினை என்னவென்று உங்களுக்குத் தெரிகிறதா ரஹ்மான்? நீங்கள் ஆஸ்கர் விருதைப் பெற்றதுதான்.
ஆஸ்கர் என்பது பாலிவுட்டுக்கு கானல் நீர் போன்றது. பாலிவுட்டைவிட நீங்கள் அதிக திறமை கொண்டவர் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது” என்று தெரிவித்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பதில்:
இயக்குநர் சேகர் கபூரின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான், “இழந்த பணம் திரும்ப வரும், புகழ் திரும்ப வரும். ஆனால், நம் வாழ்வில் முக்கியமான தருணங்கள் திரும்ப வராது. அமைதியாக இருங்கள். கடந்து செல்வோம். நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய விஷயங்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.