உத்தரப்பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுவன் கடத்தப்பட்டு, அவனது பெற்றோரிடம் 4 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய கடத்தல் கும்பலை 12 மணி நேரத்தில் காவல்துறையிரனர் கைது செய்துள்ளனர்.
சிறுவன் கடத்தல்
உத்தரப்பிரதேச மாநில கோண்டாவை சேர்ந்தவர் ராஜேஷ்குப்தா என்ற வியாபாரி. இவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவரது மகனை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்றுள்ளனர் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தெரிஞ்சுக்கோங்க⇛⇛வந்தாச்சு ‘மார்க்கெட்டிலேயே மலிவான ஹார்ட் டிஸ்க்’
மேலும் அக்கடத்தல்காரர்கள் 4 கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் கடத்தல்காரர்களைத் தேடி வந்தனர்.
அடையாளம் கண்டுபிடிப்பு
இந்நிலையில், STF பத்திரிக்கையானது, கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, சூரஜ் பாண்டே மற்றும் அவரது மனைவி சஹாவி, அவர்களுக்கு தொர்புடைய ராஜ் பாண்டே, உமேஷ் யாதவ் மற்றும் தீபு காஷ்யப் ஆகியோர் தான் கடத்தல்காரர்கள் என்று அடையாளம் காட்டியுள்ளது.
12 மணி நேரத்தில் மீட்பு
இதனைக் கொண்டு, அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் சிறுவனை 12 மணி நேரத்தில் போராடி மீட்டுள்ளனர். அப்போது அங்கு நடந்த என்கவுண்டரில் உமேஷ் மற்றும் தீபு காயமடைந்தனர். இக்கடத்தல் குற்றத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.