டெல்லியில் துணை ஆய்வாளர் ஒருவர் தனது மேலதிகாரியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை சுட்டு கொன்றுவிட்டு தானும் சுட்டு கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது??:
மத்திய ரிசெர்வ் போலீஸ் (சிஆர்பிஎஃப்) படையின் துணை ஆய்வாளர் கார்னில் சிங், 55. இவரது மேலதிகாரி தர்ஷாந் சிங்,56. இவ்ரகள் இருவரும் நேற்று நள்ளிரவு உள்துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட லோதி எஸ்டேட் பங்களாவில் இருந்து உள்ளனர். அதில், எதற்கோ இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
வாக்குவாதம் தீவிரமாக நடந்து உள்ளது. இதனால், கோபம் அடைந்த துணை ஆய்வாளர் கார்னில் சிங் தனக்கு கொடுக்கப்பட்ட துப்பாக்கியால் அவரை சுட்டு கொன்று உள்ளார். பின்பு, என்ன நினைத்தாரோ, தன்னையும் தனது துப்பாக்கியால் சுட்டு கொண்டார்.
நள்ளிரவில் நடந்தது:
இந்த சம்பவம் நேற்று இரவு 10.30 மணிக்கு நடந்து உள்ளது. இந்த சம்பவம் நடந்தவுடன் மற்ற அதிகாரிகள் மற்றும் அந்த லோக்கல் காவல் துறை அதிகாரிகளும் உடனே அங்கு விரைந்து உள்ளனர்.
இந்தியாவில் ஜூலை 31க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு?? பிரதமர் மோடி ஆலோசனை!!
ஏன் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடந்து என்றும், துணை ஆய்வாளர்,ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர், மூத்த அதிகாரியோ ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர், அப்படி இருக்க இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கான காரணங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.