தமிழகத்தில் கடந்த 1 வாரமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எதிர்பார்க்காத அளவு உயர்ந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் தங்க நகை வாங்குவதற்கு தலையை தான் அடமானம் வைக்கணும் போல என புலம்பி வருகின்றனர்.
இன்றைய விலை நிலவரம்:
கொரோனா தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் முக்கியமானது நகை வர்த்தகம். அனைத்து கடைகளையும் பூட்டிபோட்ட கொரோனா நகைக்கடைகளையும் விட்டுவைக்கவில்லை. இதனால் 3 மாதங்களாக வியாபாரம் இல்லாமல் நகைக்கடை உரிமையாளர்கள் கவலையில் ஆழ்ந்தனர். ஊரடங்கு காலத்தில் பல்வேறு விதிகள் இருப்பதால் சுப நிகழ்ச்சிகளும் அதிகளவில் நடைபெறாத காரணத்தால் நகை வியாபாரம் அதல பாதாளத்திற்குச் சென்றது. தற்போது சில தளர்வுகளுடன் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதால் மக்கள் நகைக்கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கி வருகின்றனர்.
ஆனால் தங்கம், வெள்ளி விலையைக் கேட்டதும் ஆடிப் போகின்றனர். ஆம், வரலாறு காணாத அளவிற்கு அதன் விலை உயர்ந்து உள்ளது. இன்றும் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 19 அதிகரித்து 4,904 ரூபாய்க்கும், ஒரு சவரன் 152 ரூபாய் உயர்ந்து ரூ. 39,232க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஒரு கிராம் 66.90 ரூபாயாக உள்ளது.