முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் அயிட்டம் பாடலுக்கு ஆட நயன்தாராவை அழைத்ததால் கோபமான நாயகி பட வாய்ப்பை நிராகரித்து விட்ட செய்தி தற்போது பரவி வருகிறது.
நடிகை நயன்தாரா..!
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான். ஒரு படத்துக்கு சுமார் 5 முதல் 6 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் அயிட்டம் பாடலுக்கு ஆட நயன்தாராவை அழைத்ததால் கோபமான நாயகி பட வாய்ப்பை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. எதிர்நீச்சல், சிவாஜி போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளதால் நயன்தாராவை நடிக்க வைக்க கேட்டுள்ளனர்.
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்தான் சென்னை எக்ஸ்பிரஸ். அந்த படத்தில் பிரியாமணி ஆடிய 1, 2, 3, 4 என்ற பாடலுக்கு முதல் முதலில் தேர்வு செய்யப்பட்டது நயன்தாரா தான் ஆனால் அந்த வாய்ப்பை நயன்தாரா நிராகரிக்க உடனடியாக பிரியாமணி அந்த வாய்ப்பு பிரியாமணிக்கு கிடைத்தது. சம்பள விஷயத்தில் உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மையான தகவலாம் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.