கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்து செல்லூர் ராஜு வீடு திரும்பினார்..!

0

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு திரும்பினார். பூரண குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செல்லூர் ராஜு வீடு திரும்பினார்..!

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததை தொடர்ந்து கடந்த 8ம் தேதி சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி என்று தெரியவந்தது.

அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் செல்லூர் ராஜு தனது மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையிலேயே தங்கி இருந்து மனைவியை கவனித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு – ஸ்டாலின் கண்டனம்..!

இதையடுத்து, அதே மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு அமைச்சர் செல்லூர் ராஜு சிகிச்சை பெற்று வந்தார்.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இருமுறை அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் இருமுறையும் நெகட்டிவ் என்று வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here