தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இப்பொழுது வெற்றியும் அபியும் தனியாக கப்பலில் மாட்டிக் கொண்டுள்ளனர். பிரிவிற்கு பிறகு இருவரும் ஒன்று சேரும் இந்த தருணத்தில் எப்படியும் உண்மைகள் தெரிய வர வாய்ப்புகள் உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது அபியும் வெற்றியும் கரையை வந்து சேர்ந்து விட்டனர். அபிக்கு இப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதியாக உள்ளது. ஆனால் வெற்றியின் முகம் வாடி போயிருக்க அபி என்னாச்சு என்று கேட்கிறார். அப்பொழுது வெற்றி நாம் தீவில் வந்து மாட்டிக்கொண்டோம் என்று சொல்கிறார்.
மக்களே உஷார்.., நாளை இந்தந்த பகுதிகளில் பவர் கட்.., மின்வாரியம் அறிவிப்பு!!
இதனை தாங்க முடியாத அபி மயக்கமடைந்து விடுகிறார். அடுத்து அபியை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வதிலேயே வெற்றி இருக்க போகிறார். அபிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி மீது இருந்த பழைய காதல் துளிர் விடும். இந்நிலையில் தான் சுடர் பற்றிய உண்மைகள் எப்படியும் வெற்றிக்கு தெரிய வரும். எனவே தான் ரசிகர்கள் ஆவலுடன் சீரியலை பார்த்து வருகின்றனர்.