பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் மூர்த்தி, ஜீவா கதிரை வெளியே எடுப்பதற்கான வேலைகளை பார்க்கின்றனர். இந்த பக்கம் முல்லை நான் கதிரை பார்க்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போவேன் என்று அடம் பிடிக்க அவரை வீட்டில் உள்ளவர்கள் சமாதானப்படுத்தியும் கேட்காமல் முல்லை அப்பாவோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். போலீஸ் ஸ்டேஷனில் அழுது கொண்டே இருக்க அங்கு போலீஸ்காரர்கள் திட்டுகிறார்கள்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
முதலில் கதிரை பார்க்க விடாமல் முல்லை தடுக்க பின் பார்க்க விடுகின்றனர். கதிரிடம் முல்லை உங்கள இப்படி பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொல்ல, உடனே கதிர் நீ இப்படி அழுவதுதான் கஷ்டமா இருக்கு என்று கதிர் சொல்ல, நீ அழுதுட்டு இருந்தா நம்ம குழந்தை பார்த்து என்ன நினைக்கும்? நீ தைரியமா இரு என்று சொல்கிறார்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(29.05.2023) – முழு விவரம் உள்ளே!!
அடுத்ததாக முல்லையிடம் கண்ணன் மன்னிப்பு கேட்க உனக்காக மாமா கிட்ட இவரு என்ன எல்லாம் பேசினாரு தெரியுமா? ஆனா இப்ப நீயே உள்ளே கொண்டு வர வச்சுட்ட என்று சொல்லி திட்டுகிறார். இதை தொடர்ந்து மூர்த்தி, ஜீவா, ஜனா மூவரும் அடிபட்ட பேங்க் ஆபிசரை சமாதானப்படுத்த அவர்கள் முதலில் மறுத்து விடுகின்றனர். பிறகு அவர்கள் கேஸை வாபஸ் வாங்குவதற்கு பணம் கேட்க மூவரும் அதிர்ச்சியாகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.