தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில திரைப்படங்களை கொடுத்தாலும், வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேடிப்பிடித்து நடிப்பவர்களில் ஒருவர் நடிகர் அருள்நிதி. கிடைத்த கதை அனைத்திலும் நடிப்பதை விட்டு விட்டு, ஒரு சில படங்களில் நடித்தாலும் அதனை சிறப்பான முறையில் கொடுத்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட ஆதரவைக் கொடுத்து வருகின்றனர்.
இந்த வரிசையில் நடிகர் அருள்நிதி நடித்துள்ள புதிய திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. சை.கவுதமராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் மற்றும் நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடித்துள்ளனர். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
இரட்டை குழந்தைகளுடன் நடிகை நயன்தாரா….,விக்னேஷ் சிவனின் அன்னையர் தின வாழ்த்து….,
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மே 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரசிகர்களுக்கான சிறந்த படமாக அமையும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.